சென்னை: சென்னை எண்ணூர் கழிமுகத்தில் தேங்கியுள்ள நீரில் கலந்துள்ளது என்ன என்பது குறித்து ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பீனால், எண்ணெய் மற்றும் கிரீஸ் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொசஸ்தலை ஆற்றின் கழிமுக நீரில் ஒரு லிட்டர் தண்ணீரில் 48.4 மி.கி. பீனால் கலந்துள்ளது.