சென்னை: சென்னையில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.