சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை நமீதா பத்திரமாக மீட்கப்பட்டார். துரைப்பாக்கம் ஆனந்த் நகர் திமுக நிர்வாகி ஏ.கே.ஆனந்த் தலைமையில் தன்னார்வலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உணவு, குடிநீர், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கச் சென்றபோது நமீதா குடும்பத்தினர் தவிப்பது தெரிய வந்தது. முதல் மாடியில் சிக்கித் தவித்த நமீதாவை, தன்னார்வலர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் என்டிஆர்எப் மீட்டனர்.