சென்னை: நடப்பாண்டில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு அனைத்து இடங்களிலும் தண்ணீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதால் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் 150 எம்.எல்.டி. தண்ணீர் வழங்கப்பட உள்ளது என்று அவர் கூறினார்.