நடப்பாண்டில் சென்னையில் குடிநீர் பிரச்சனை வராது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: நடப்பாண்டில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு அனைத்து இடங்களிலும் தண்ணீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதால் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் 150 எம்.எல்.டி. தண்ணீர் வழங்கப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

 

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா