சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 12 விமானங்கள் முன்னறிவிப்பு இன்றி ரத்து: பயணிகள் அவதி

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 12 விமானங்கள் முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு டெல்லி, ஷீரடி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 12 விமான சேவைகள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.

சென்னையிலிருந்து டெல்லி செல்லும் 4 விமான சேவையான இண்டிகோ ஏர்லைன்ஸ், ஷீரடிக்கு செல்லும் விமானம் ஸ்பைஸ் ஜெட் விமானமும், ஐதராபாத் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் செல்வது, வருவது என மொத்தம் 12 விமான சேவைகள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சென்னையில் விமான பயணிகள் அவதியுற்று வருகின்றனர். பயணிகள் அதிகாரிகளிடம் ஏன் விமானம் ரத்து செய்யப்பட்டது என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Related posts

தொழிலாளி கொலை வழக்கில் 8 பேர் கைது

ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல்

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு