சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1கோடி நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளை சீரமைக்க தலா ரூ.25லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள், மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.