சென்னை: சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் இதுவரை 181 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் தெரிவித்தார்.