சென்னை: சென்னையில் கல்லூரி வாயலில் மாணவியை குத்திக் கொலை செய்தவருக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது . மதுரவாயலை சேர்ந்த மாணவி அஸ்வினி, கே.கே.நகரில் உள்ள கல்லூரி வாயிலில் 2018ம் ஆண்டு குத்திக் கொலை செய்யப்பட்டார். மாணவியை கொலை செய்த அழகேசனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10,500 அபராதம் விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.