நடப்பாண்டு மொத்தம் 3,486 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 2,187 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் பி.எட் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் செப்.30ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, இவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி 19ம் தேதி வரை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் பாட வாரியாக நடைபெற உள்ளது.
முதல் நாளான இன்று, காலை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், மதியம் பி.இ முடித்தவர்கள் மற்றும் வரலாறு பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது. மாணவர்கள் பாடவாரியாக எந்த தேதியில் கலந்தாய்வுக்கு வர வேண்டும் என்ற தகவல்கள் எஸ்எம்எஸ் மற்றும் மெயில் மூலமாக அவர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.