அவரிடம் உரிய ஆவணங்களில் முத்திரை பதிவு இல்லாததால் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவர் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இது போல் பாதுகாப்பான பகுதியில் போலி டிக்கெட் மூலம் எப்படி நுழைந்தார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற பாதுகாப்பு குறைபாடுகளை நீக்க அதிகாரிகளும் ஆலோசனை செய்து வருகின்றனர்.