சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள ஏழரைக் கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4.5கோடி மதிப்பு தங்கம், ரூ.45லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை வருவாய் புலனாய்வுத்துறை கைப்பற்றியது. சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்த இரு பெண்கள் மற்றும் இரு பயணிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.