சென்னை: சென்னை அடையாறு பகுதியில் சென்று கொண்டிருந்த மாநகர ஏ.சி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு சென்ற அரசுப்பேருந்தில் தீ பற்றியது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அரசுப் பேருந்தில் பற்றிய தீயை அணைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.