சென்னை: கடற்கரை – தாம்பரம் இடையே நாளை முதல் 55 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதல் பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக தாம்பரம் மார்க்கத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 10 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.