செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 27 வயதுடைய பெண் நேற்று முன்தினம் வேலையை முடித்து செங்கல்பட்டில் உள்ள தனது வீட்டிற்க்கு நடந்து வந்துள்ளார். அப்போது, இளம் பெண்ணை பின் தொடர்ந்து வந்த இரண்டு வாலிபர்கள் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். புகாரின்பேரில், செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு தட்டான்மலை பகுதியில் அவர்களை நேற்று கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ் (24) மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் குருப்பிறை பகுதியை சேர்ந்த சார்லஸ் (26) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.