இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைத்தல், கலைஞரின் கனவு இல்லம் திட்ட பயனாளிகள் தேர்வு செய்தல் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. இதில், கிராம மக்கள் பங்கேற்று பயனடையலாம். மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் முறையாக நடைபெறுகிறதா என கண்காணிக்க வட்டார அளவிலான உதவி இயக்குநர் நிலையிலான பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.