செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 21 எஸ்பி தனிப்பிரிவு காவலர்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் நேற்று உத்தரவிட்டார். அதுகுறித்த விவரம் பின்வருமாறு: செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் எஸ்பி தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த தமிழ்வானன், திருக்கழுக்குன்றம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் எஸ்பி தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த ஜெகன், படாளம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். படாளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பாலாஜி மதுராந்தகம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். மதுராந்தகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கவியரசன் மேல்மருவத்தூர் காவல் நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ரமேஷ்குமார் ஒரத்தி காவல் நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பாலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பச்சைமுத்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். திருப்போரூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ராஜ்குமார் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதில், செங்கல்பட்டு தாலுகா காவல் எல்லை பெரிது என்பதால் கூடுதலாக மானமதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நித்தியானந்தம் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் எஸ்பி தனிப்பிரிவு காவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 21 எஸ்பி தனிப்பிரிவு காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.