செங்கல்பட்டு : செங்கல்பட்டில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற A+ ரவுடி தணிகாசலத்தை சுட்டு பிடித்தது போலீஸ். படுகாயம் அடைந்த ரவுடி தணிகா சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியபாளையத்தை சேர்ந்த தணிகா (எ) தணிகாசலம் மீது கொலை, கொள்ளை என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.