ஆனால், ராமு வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோதும் ராமு செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராகவன் செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ராமு மின்விசிறியில் நைலான் கயிற்றைக் கட்டி தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதையடுத்து, போலீசார் ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.