செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் மருத்துவமனை வளாகத்தில் சடலமாக மீட்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் மருத்துவமனை வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்டார். 50 வயதான தம்பிரான் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு வரை மூன்றாவது மாடியில் உள்ள வார்டில் தம்பிரான் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த தம்பிரான், இன்று மருத்துவமனை வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தம்பிரான் தற்கொலை செய்து கொண்டாரா என காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?