மூத்த குடிமக்களிடமிருந்து பெறப்படும் குறை களைவு மனுக்களை விரைந்து தீர்வு செய்ய ஒவ்வொரு வருவாய் கோட்டத்தில் சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியரை தலைவராக கொண்ட உட்கோட்ட தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மற்றும் இதர சேவைகள் தடையின்றி கிடைக்க பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான முதியோர் நலக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல சட்டம் 2007ன் கீழ் பெறப்படும் அனைத்து மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை மேற்படி சட்டத்தின்படி பரிசீலனை செய்து இரண்டு மாத காலத்திற்குள் அம்மனுக்கள் மீது உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்பது உள்ளிட்ட முக்கிய கரு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையாளர் பவன்குமார் ரெட்டி, மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.