செங்கல்பட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

செங்கல்பட்டு: தமிழக காங்கிரஸ் தலைவரை, ‘ரவுடி’ என, விமர்சித்த பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை, ரவுடி என, விமர்சித்தார் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை. ‘நான் ரவுடி என்பதற்கு அண்ணாமலை ஆதாரம் காட்ட வேண்டும்; அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடர்வேன்’ என, செல்வப்பெருந்தகை எச்சரித்தார்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு இராட்டினங்கிணறு ராஜூவ்காந்தி சிலை முன்பாக செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் RTI மாநில துணை தலைவர் முருகன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் நாளுக்கு நாள் அண்ணாமலைக்கு எதிரான போராட்ங்கள் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் கலைபிரிவு மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, RTI மாவட்ட தலைவர் ஜல்லி முருகன், RTI மாவட்ட தலைவர் ராஜநிதி, SCST மாநில பொதுச்செயலாளர் கருணாகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Related posts

கல்லூரி மாணவர்களுக்கான தமிழால் முடியும்! வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

ஐசிசி மகளிர் டி20 போட்டியில் பேட்டிங்கிற்கான தரவரிசை பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு 81,815 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!