தமிழ்நாட்டை குடிசைகள் அற்ற மாநிலமாக மாற்றவும் பழுதடைந்துள்ள வீடுகளில் வசிக்கும் மக்களின் நலன்களை பாதுகாத்திட அந்த வீடுகளை பழுதுகள் நீக்கி புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த போதிய ஊழியர்கள் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிரமங்கள் உள்ளன. எனவே, இந்த இரண்டு திட்டங்களையும் தமிழ்நாட்டின் அனைத்து கிராமப்புறங்களிலும் சிறப்பாக செயல்படுத்திட தமிழக அரசே, ஊழியர்கள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.
அதேபோல, கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளர்கள் தேர்வு குறித்தான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டும். தமிழக அரசே, திட்ட பயனாளர்கள் பட்டியலை இறுதிபடுத்த உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.