கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் எடுத்த போட்டோவை பார்த்த மனைவி தற்கொலை

திருத்தணி: திருத்தணி நகராட்சி, அக்கையநாயுடு தெருவில் வசிப்பவர் ராஜேஷ் (33), தனியார் பேருந்து டிரைவர். இவரது மனைவி யோகேஸ்வரி (25). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. யோகித் (4) என்ற மகனும், சஞ்சனா (3) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு யோகேஸ்வரி, கணவரை பிரிந்து தாய் வீட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்துள்ளார். கடந்த 15ம் தேதி ராஜேஷ் தனது நெருங்கிய தோழியுடன் இருக்கும் போட்டோக்களை யோகேஸ்வரியின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த யோகேஸ்வரி, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related posts

இந்தியன் 2 திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்கக் கூடாது: சீமான் பேட்டி

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே கோயில் திருவிழாக்களை கமுகமாக நடத்த முடியும் : ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து