விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் சேதமடைந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்விடத்தில் வருவாய், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தின் போது பணியில் எத்தனை தொழிலாளர்கள் இருந்தார்கள், வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.