விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி கலந்துகொண்டு, பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது, பொது இடங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியாக ஏற்படும் தொல்லைகள், படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள் மீண்டும் படிப்பை தொடர்வது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து பேசினார். ஏதேனும் அவசர உதவியை பெற பள்ளி மாணவ-மாணவிகள் 181, 1098, 1930 ஆகிய கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றனர். இதனைதொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.