விருதுநகர்: சாத்தூர் அருகே அலமேலுமங்கைபுரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இளம்பெண் உயிரிழந்துள்ளார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து திடீரென சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்த விபத்தில் இளம்பெண் முத்துமாரி உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.