சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி மருந்து கலக்கும் பணியின் போது விபத்து: ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடிப்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் ஜெயபாலனுக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் வேலை செய்து வந்தார். அவர் வழக்கம் போல இன்று காலை 7 மணிக்கு வெடி மருந்து கலக்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது மருந்தில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளன. இந்த விபத்தில் சண்முகராஜ் (36) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு ஒரு அரை முழுவதும் தரைமட்டமாகி இருந்தது. இதில் உயிரிழந்த சண்முகராஜ் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!

காஞ்சிபுரத்தில் திமுக பவளவிழா பொதுக்கூட்டம் தொடங்கியது..!!

நீலகிரி சீகூர் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு..!!