அப்போது மருந்தில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளன. இந்த விபத்தில் சண்முகராஜ் (36) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு ஒரு அரை முழுவதும் தரைமட்டமாகி இருந்தது. இதில் உயிரிழந்த சண்முகராஜ் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.