விருதுநகர்: சாத்தூர் அருகே ஆர்.ஆர்.நகரில் ராம்கோ சிமெண்ட் ஆலை துணை மேலாளர்கள் வீடுகளில் 200 சவரன் நகை கொள்ளை அடித்துள்ளனர். ராம்கோ சிமெண்ட் ஆலையின் மெக்கானிக் பிரிவு துணை பொது மேலாளர் பாலமுருகன் வீட்டில் நகை திருடியுள்ளனர். நிர்வாக பிரிவு துணை பொது மேலாளர் ராமச்சந்திரன் வீட்டிலும் நகை திருட்டு; போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருவரும் வெளியூருக்கு சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.