மதுரை: தேனி குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரியின் செயல்பாடுகளுக்கு தடை கோரிய வழக்கில் மனு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவை பின்பற்றாமல் கோயில் நிர்வாக அதிகாரி செயல்படுவதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.