புதுக்கோட்டை: அறந்தாங்கியில் அதிமுக நிர்வாகி தலைவராக உள்ள கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளரும் அதிமுக நகர செயலாளருமான ஆதி.மோகனகுமார், கூட்டுறவு வங்கியின் தலைவராக உள்ளார். நிதி பரிவர்த்தனை அறிக்கையை முறையாக தாக்கல் செய்யாததால் சோதனை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.