ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தை கடந்தபோது அதிக வெப்பம் காரணமாக செல்போன் திடீரென வெடித்தது. இதனால் செல்போன் எரிந்து அந்த பெட்டியில் புகை சூழ்ந்தது. அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சி11, சி 12 பெட்டிகளில் செல்போன் வெடித்த புகை சூழ்ந்ததால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதையடுத்து இரண்டு பெட்டிகளின் பிரதான கதவுகளைத் திறந்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் புகையை அகற்றினர். அதன் பிறகு ரயில் அரை மணி நேரம் தாமதமாக மீண்டும் புறப்பட்டு சென்றது.