Saturday, July 6, 2024
Home » சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் இந்தியா புதிய அத்தியாயம் படைத்துள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் இந்தியா புதிய அத்தியாயம் படைத்துள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

by Kalaivani Saravanan
Published: Last Updated on

டெல்லி: சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் இந்தியா புதிய அத்தியாயம் படைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான் 3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ குழுவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது.

இன்று ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் ஒரு மாதத்துக்கும் மேலான பயணத்துக்கு பின் நிலவைச் சுற்றி வரும். பூமியில் இருந்து 179 கி.மீ தொலையில் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான் 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. நிலவைச் சுற்றி வந்த பின் ஆக.23-ம் தேதி நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சந்திரயான் 3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ குழுவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் இந்தியா புதிய அத்தியாயம் படைத்துள்ளது. சந்திரயான் 3 வெற்றிகரமாக செலுத்தி இஸ்ரோ வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சந்திரயான் – 3 இந்தியாவின் விண்வெளி ஒடிஸியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது; ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும் லட்சியங்களையும் உயர்த்தி உயரமாக உயர்கிறது.

சந்திரயானின் வெற்றி நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். தங்களின் ஆன்மாவிற்கும் புத்தி கூர்மைக்கும் தலை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். இதேபோல் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளி ஆய்வில் மகத்தான மைல்கல்லை சந்திரயான் 3 விண்கலம் எட்டியுள்ளது.சந்திரயான்-3 பயணம் வெற்றியடைய வாழ்த்துவதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டிவீட் செய்துள்ளார்.

You may also like

Leave a Comment

nine + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi