சென்னை: ஏபிஎக்ஸ்எஸ் என்ற கருவி நடத்திய பரிசோதனையில் நிலவில் கந்தகம் இருப்பதுடன் மேலும் சில தனிமங்கள் சிறிய அளவில் இருப்பது உறுதி செய்யபட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ரோவர் கந்தகம் இருப்பதை கண்டறிந்த நிலையில் ரோவரில் இருந்து மற்றொரு கருவியில் பரிசோதனை செய்யப்பட்டது. இயற்கையாகவே கந்தகம் படிந்துள்ளதா அல்லது எரிமலை வெடிப்பால் படிந்ததா என்று இஸ்ரோ ஆய்வு செய்து வருகிறது.