அதனைத் தொடர்ந்து நிலத்தை பிரித்து தரும்படி நிலஅளவைத் துறையிடம் கேட்ட போது, துணை சர்வேயர் சதாம் உசேன் ரூ.1.80 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்ச பணத்தை சதாம் உசேனிடம் தெலுங்கு தேசம் நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், முதலமைச்சராக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் இறுதியில் குப்பம் வந்திருந்தார். அப்போது, தெலுங்கு தேசம் கட்சியினர் உங்களது நிலம் என்று தெரிந்தும் துணை சர்வேயர் சதாம் உசேன் லஞ்சம் வாங்கினார் என்று தெரிவித்தனர்.
இவ்விவகாரம் தொடர்பாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் சுமித் குமார் மற்றும் இணை ஆட்சியர் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் விவாரணை நடத்தினர். அப்போது துணை சர்வேயர் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இந்தநிலையில், கடந்த 27ஆம் தேதி சாந்திபுரம் மண்டலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், நில அளவைக்கு விண்ணப்பித்த போது அவரிடமும் துணை சர்வேயர் சதாம் உசேன் ரூ.1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது பற்றி அந்த விவசாயி அதிகாரிகளிடம் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதிலும் சதாம் உசேன் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டதால் துணை சர்வேயர் சதாம் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.