டெல்லி: சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவு கடிதங்களை வழங்கினர். தேர்தலில் பெரும்பான்மை பெறாத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் வென்ற நிலையில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.