ஆந்திரா: சந்திரபாபு நாயுடுவை வீட்டுக் காவலில் வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விஜயவாடா நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சிறைக்கு பதில் வீட்டுக்காவலில் வைக்கக்கோரி சந்திரபாபு நாயுடு தரப்பில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. திறன்மேம்பாட்டு திட்டத்தில் ரூ.371கோடி முறைகேடு வழக்கில் கைதான சந்திரபாபு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.