சென்னை: தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளனர்.