சென்னை: தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.