சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை. குமரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, திருவார் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.