இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதி, ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இந்நிலையில், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சில தினங்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் விடுவித்து, இந்திய தூதரக அதிகாரிகள் பராமரிப்பில் ஒப்படைத்தது. தூதரக அதிகாரிகள் அவர்களுக்கு விமான டிக்கெட் போன்ற வசதி செய்தனர். அதன்பின்பு நேற்று முன்தினம் இரவு கொழும்பிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 7 பேரையும் அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் 7 மீனவர்களையும் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.