புதுடெல்லி. இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபரில் உள்நாடு, சர்வதேச வழித்தடங்களில் எரிபொருள் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. எரிபொருள் விலை உயர்வை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் டிக்கெட்டுக்கள் மீதான எரிப்பொருள் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படுவதாக இன்டிகோ நேற்று அறிவித்துள்ளது. எரிபொருள் விலை குறைந்துள்ளதால் கட்டணம் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளதாக இன்டிகோ குறிப்பிட்டுள்ளது.