தேவையானவை:
பொடித்த சர்க்கரை – 1 கிண்ணம்
சத்துமாவு – 1 கிண்ணம்
நெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:
பொடித்த சர்க்கரையை கட்டிகள் இல்லாமல் சலித்துக்கொள்ளவும். இதை சத்துமாவுடன் நன்கு கலந்து கொள்ளவும். நெய்யை சற்று சூடாக்கி, மாவு – சர்க்கரைக் கலவையில் சிறிது சிறிதாக கலந்து கொண்டே வரவும். மாவை உருண்டைபிடித்துப் பார்த்தால், உதிராமல் இருக்க வேண்டும். அதுதான் சரியான பதம். அந்தப் பதம் வந்ததும் நெய் சேர்ப்பதை நிறுத்திவிட்டு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.