இதற்காக குடும்பத்தினருடன் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் பள்ளி விடுமுறையையொட்டி மனைவி வெங்கடலட்சுமி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆந்திராவுக்கு சென்றுள்ளார். இதனால் நாகேஸ்வரராவ் குடியிருப்பில் தனியாக தங்கியிருந்தார். இந்நிலையில் நாகேஸ்வரராவ் நேற்றிரவு மனைவிக்கு போன் செய்துள்ளார். அப்போது போனில் பேசியபடியே திடீரென கதவை தாழிட்டுக்கொண்டு போனை நாகேஸ்வரராவ் ‘சுவிட்ச் ஆப்’ செய்ததாக கூறப்படுகிறது.
தனால் சந்தேகமடைந்த அவரது மனைவி, அக்கம் பக்கத்தினருக்கு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அவர்கள் சென்று பார்த்தபோது நாகேஸ்வரராவ் வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகேஸ்வரராவ் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.