2 பேரையும் கைது செய்து விசாரித்ததில் அவர்களுக்கு விமான நிலையத்தில் சரக்குப் பிரிவில் பணிபுரியும் ஷரப் அலியுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஷரப் அலியின் செல்போனை பரிசோதித்தபோது விமான நிலைய தொழிற் பாதுகாப்புப் படை உதவி கமாண்டன்டான நவீன் குமார் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததால்உதவி கமாண்டன்ட் நவீன் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.