துணை முதல்வர் பதவியை தற்ேபாது அவர் வகித்து வருவதால், பிடிசிசி வங்கியின் பணியானது மேலும் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், கட்சிப் பணியும் அதிகரித்துள்ளதால், அவர் இயக்குநர் பதவியில் இருந்து விலகியதாக அந்த வங்கியின் தலைவர் டாக்டர் திகம்பர் துர்கேட் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான அஜித் பவார், கடந்த 1991ம் ஆண்டு முதல் வங்கியின் இயக்குநராக பணியில் இருந்து வந்தார். அஜித் பவார் இயக்குநராக பணியாற்றிய காலத்தில், வங்கியின் மதிப்பு ரூ.558 கோடியாக இருந்தது; ஆனால் தற்போது ரூ.20,714 கோடியாக உள்ளது.