நமது திராவிட மாடல் அரசின் கீழ் முதலீடுகளின் மையமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நமது திராவிட மாடல் அரசின் கீழ் முதலீடுகளின் மையமாக தமிழ்நாடு திகழ்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;

“முதலீடுகள் மழை பொழியும், நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு சக்தி தரும் நாள்! நமது திராவிட மாடல் அரசின் கீழ் உலகளாவிய முதலீடுகளின் மையமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது!

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024இல் ரூ.17,616 கோடி முதலீட்டில் 19 திட்டங்களைத் துவக்கிவைத்து, ரூ.51,157 கோடி மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினேன். மொத்தம் 1,06,803 புதிய வேலைகள் உருவாக்கப்படுகின்றன, இது நமது இளைஞர்களுக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது மற்றும் மாநிலம் முழுவதும் சமமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Related posts

கோடம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் மேயர் பிரியா

கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை: ஐகோர்ட் பாராட்டு

14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!