வெங்கல்குப்பம் கிராம பகுதியைச் சேர்ந்த மக்கள் இங்கிருந்து கன்னிகைப்பேர், பெரியபாளையம், திருவள்ளூர் போன்ற பகுதிகளுக்குச் சென்று வருவதற்காக இந்த பேருந்து நிழற்குடையினை பயன்படுத்தி வந்தனர். தற்போது நிழற்குடை செடிகொடிகள் படர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது. அதேபோல், குடிநீர் தொட்டியும் பயன்பாடில்லாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடிகொடிகள் படர்ந்துள்ள பேருந்து நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.