குறுவட்ட பூப்பந்தாட்ட போட்டி: அரசு பள்ளிகள் முதலிடம்

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் குறுவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், 25 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டி, பல்வேறு சுற்றுகளாக மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெற்றது. போட்டியை, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோதண்டபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில், 14 மற்றும் 17 வயது ஆண்களுக்கான பிரிவில் மாமல்லபுரம் செயின்ட் மேரிஸ் பள்ளி முதல் இடமும், 19 வயது பிரிவில் மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி முதல் இடமும், பெண்களுக்கான 14 மற்றும் 19 வயது பிரிவில் திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல் இடமும், 17 வயது பிரிவில் குழிப்பாந்தண்டலம் அரசு உயர்நிலைப் பள்ளி முதல் இடமும் பிடித்தன. இதையடுத்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Related posts

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்