இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி நீனா பன்சல் கிருஷ்ணா அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் என்றும் கூற முடியாது. எனவே டெல்லி மதுபான கொள்கை தொடர்பான விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க முடியாது. எனவே அவரது மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் விசாரணை நீதிமன்றத்தை அணுகி தகுதியின் அடிப்படையில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தார்.