சிபிஐ தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: டெல்லி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதே புகாரில் சிபிஐயும் அவரை கைது செய்தது. இதற்கு எதிராகவும், சிபிஐ வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வழக்கை விரிவாக விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 17ம் தேதி ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி நீனா பன்சல் கிருஷ்ணா அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் என்றும் கூற முடியாது. எனவே டெல்லி மதுபான கொள்கை தொடர்பான விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க முடியாது. எனவே அவரது மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் விசாரணை நீதிமன்றத்தை அணுகி தகுதியின் அடிப்படையில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தார்.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?