வேலூர்: வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி அடித்து சித்ரவதை செய்த விவகாரத்தில் விசாரணை. சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சிவகுமார் உடன் இருந்த ஆயுள் கைதிகளிடம் சிபிசிஐடி போலீஸ் தீவிர விசாரணை. இதுவரை 5-க்கும் மேற்பட்ட கைதிகளிடம், சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை வாங்கியுள்ளனர்.